Category: தஞ்சாவூர்

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடி காப்பரிசி, காதோலை கருகமணி, மாங்கல்யம் வைத்து பூஜை செய்து வழிபட்டு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று தங்கள் திருமணம் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.

https://youtu.be/u6efLBdP8c0

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/QhKyoVQs7mU

ஆடி அமாவாசை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, காய்கறி, கீரை ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரியில் விட்டு மறைந்த தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பளம் செய்தனர்.

https://youtu.be/2g7X-se4yCY

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தஞ்சையில் உள்ள சிவாஜி கணேசன் முழு உருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் சிவாஜி பேரவை தலைவர் சதா வெங்கட்ராமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

https://youtu.be/U49a8s0ah94

கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆடி கீர்த்தியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

https://youtu.be/uhyWwFesn6g

பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டுக்கோட்டை அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் மாணவர்கள், வனத்துறை அலுவலர்கள் இணைந்து இன்று கடற்கரையை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் – பொதுமக்களுடன் இணைந்து உறுதி மொழியும் ஏற்போம்

https://youtu.be/GUh84sdC4dE

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதிகளில் திருட்டு போன மற்றும் தொலைந்து போன 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

https://youtu.be/yofCHvsGFTQ

You missed