Post navigation தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன், அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய். சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக வழக்கறிஞர் அணி மண்டல இணை அமைப்பாளர் ஆர். விக்னேஷ் பேட்டி.