Post navigation விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆலம்பூண்டி, பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதரம் நடத்திவரும் நிலையில் ஆலம்பூண்டி பேருந்து நிறுத்ததில் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோ நிறுத்தக்கூடாது என சத்தியமங்கலம் காவல்துறையினர் அறிவித்து மேலும் வழக்கு பதிவு செய்வதாக கூறப்படுகிறது.சத்தியமங்கலம் காவல்துறையை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சியில் நடந்த புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவிதொகைக்கான காசோலையை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.வழங்கினார்.