Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கேரளாவில் நடைபெறும் உலக ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இந்து கடவுள் ராமன் குறித்து பேசியதற்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

https://youtu.be/audMJkTTV1o

புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடி பட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சூடு போட்டியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்த நிலையில் அண்ணாமலை இடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்த அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

https://youtu.be/5LpvF9YPY-w

தமிழகத்தில் முதல் முறையாக ரோந்து காவல்துறையினரின் செல்போன் எண்களுக்கு பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமாக கியூஆர் கோடு வசதியினை கோவை மாநகர காவல் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

https://youtu.be/dXTKUBRIIkU

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம்… திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை திருவாரூர் மாவட்டஆட்சியர் , நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்றஉறுப்பினர் துவக்கி வைத்தனர் …

https://youtu.be/SPs3CDdb30c

தஞ்சையில் காவல்துறை சார்பில நடந்த சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 1500 பேர் கலந்து கொண்டு ஓடினர். 5. கி.மீ பிரிவில் முதல் இடம் பிடித்த ஆரோக்கியசாமி மற்றும் கீதாஞ்சலி ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் மிதிவண்டி வழங்கி பதக்கம் அணிவித்து வாழ்த்தினார்.

https://youtu.be/miJHxH35RYo

அறந்தாங்கி .சிலட்டூர் அருகே தேவர் பட்டி கிராமத்தில் மின்சாரம் தாக்கி எட்டாம் வகுப்பு படித்து வரும் செல்வக் கண்ணன் (13 ) என்ற பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

https://youtu.be/PXbaak64m-g

திருவாரூர்மாவட்டஅளவிலான 2025 டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் க்கான போட்டி … தேர்வு செய்யப்பட்ட இருவர் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர் …

https://youtu.be/K25Nm0TVaPY

பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன், திரளான பக்தர்கள் முன்னிலையில் தனது வலது தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்!

https://youtu.be/xOHzwoGzfF8

You missed