Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ள அமைச்சரின் ஆதரவாளர் – நிர்வாகத்தின் போஸ்டரை ஒட்டச்சென்ற வழக்கறிஞர்களை பூட்டிவைத்து திமுக நிர்வாகி அடியாட்களுடன் கொலைமிரட்டல் விடுத்ததால் பரபரப்பு

https://youtu.be/q3YGdTmiOQM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விசிக நிர்வாகியான சின்னப்பன்(எ)ரூபன்- சிவரஞ்சனி என்பவரின் புதிய குடில் திறப்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். தொல் திருமாவளவன் புதிய இல்லத்தை திறந்து வைத்து குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

https://youtu.be/hnxKlyGpL7c

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 25 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கோவை க.க.சாவடி பகுதியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் பணம் கடத்திய இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்..

https://youtu.be/1L2EynCcjHI

தலைக்கவசம் அணிவது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றி பேரணியை துவக்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா

https://youtu.be/UX6VcX8L-UA

ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு புதுக்கோட்டை கோவில்பட்டியில் அமைந்துள்ள திரிசூல பிடாரியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

https://youtu.be/YnnOjS0n1Ao

You missed