Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

பொது விநியோகத்திட்டத்தை தனித்துறை ஆக்கவேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ….

https://youtu.be/R1ssV_m7Ez8

மதுரை விளாங்குடி பகுதியில் நியாய விலை கடை, ஆழ்துளை போர்வெல், சிசிடிவி கேமரா, புதிய மாமன்ற அலுவலகம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 40லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

https://youtu.be/yWaSO-TFxxI

தூத்துக்குடி மாவட்டம்:மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தை தமிழக முழுவதும் மேற்கொண்டு வரும் எதிர்க்கட்சித் தலைவரும் , அதிமுக பொதுச்செயலாளரும்மானஎடப்பாடி கே பழனிச்சாமி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மக்களை சந்தித்து உரையாற்றினார்

https://youtu.be/bK9HEtOFvxY

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் ஊராட்சியில் ஆறு மாதங்களுக்குப் பிறகு 100 நாள் வேலைக்கு அழைத்த நிலையில் வேலை வழங்காமல் அலைக்கழித்ததாக 100 நாள் வேலை பணியாளர்கள் ஆத்திரத்தில் சாலை மறியல் போராட்டம்

https://youtu.be/WYhmDBtBpDw

புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேவர் மலை குடவரை சிவன் கோவிலில் குருபூஜை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அன்னதான நிகழ்வுகளை வழங்கினர்.

https://youtu.be/A89YHABWaso

குவாரி நடத்துபவருக்கும் கிரஷர் நடத்துபவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோரி இருந்த வாகனங்களை பூட்டி சாவியை எடுத்துச் சென்ற நபரால் குவாரி இயங்க முடியாத சூழல் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

https://youtu.be/MFXYfuOocQ8

ஆண்டிபட்டி அருகே 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு வகுப்பறையில் பாலியல் தொந்தரவு அளித்து, மாணவியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார் – தேனி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை

https://youtu.be/O2AIYP91t4A

You missed