Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தை பொறுத்த வரை முடிவெடுப்பார் கூட்டணியில் யாரை சேர்ப்பது எவ்வளவு தொகுதி பகிர்ந்து அளிப்பது என்பது குறித்து எடப்பாடி தான் முடிவு செய்வார்

https://youtu.be/PqWoNhmBvqM

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பால்வளத் துறையின் சார்பில் மிஷன் ஒயிட் வேவ் என்னும் திட்டத்தின் பயிற்சி பட்டறையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து எம்பிஏ மாணவர்களிடம் கலந்துரையாடினார்

https://youtu.be/nND4mPTSo64

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் போதைப்பொருள் தடுப்பு குழுமம் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு தினம் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்புரை ஏற்ற மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளரும் மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் தலைமை உரையாற்றினார்

https://youtu.be/ME___LnGOYA

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு வழங்கிய சில நேரத்தில் முதல் பட்டதாரி சான்று வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு என திருவாரூரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேச்சு … பி.எட் படித்த மாணவிகள் வழங்கிய மனு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி …

https://youtu.be/d1qSWeC51Ds

புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவத்துறை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய போதைப்பொருள் சுழற்சியை முறியடிப்போம் குற்ற செயல்களை தடுப்போம் என்ற தலைப்பில் மக்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய பேரணியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். கலைவாணி கொடியசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/kd5-M_TksiI

காரைக்குடியில் குளோபல் மிஷன் தனியார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக, இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு “போதை பொருள்களை தவிர்ப்போம்.. வளமான எதிர்காலம் அமைப்போம்” என்கின்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

https://youtu.be/X3FZXDSRYKE

கொடைக்கானல் குணா குகை சுற்றுலா தலத்தில்,அத்து மீறி கம்பிக்குள் நுழைந்து,இன்ஷ்டாகிராமில் பதிவேற்றம் செய்த இளைஞருக்கு வனத்துறை 10,000 ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது, அத்துமீறி வனப்பகுதிக்கு செல்லும் இளைஞர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இருப்பதாக எச்சரிக்கை

https://youtu.be/mH8oPlN3QTg

You missed