Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவ கழிவு ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்புப் போராட்டத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தார்

https://youtu.be/jN0BbCLm5_Q

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/nC7_x6eHX5g

கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/CdLbrna8HKg

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் கணக்கன்காடு ஊராட்சி வெட்டன்விடுதி பரவக்கோட்டையான் தெருவில் வசித்து வரும் குமரேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை gas சிலிண்டர் வெடித்து வீடு முற்றிலும் சேதமடைந்தாக செய்தி அறிந்து உடனடியாக அப்பகுதிக்கு தாசில்தார் VAO உள்ளிட்ட அரசு அதிகாரிகளை வரவழைத்து, அரசின் சார்பாக ஏற்பாடு செய்யவேண்டிய இழப்பீடு மற்றும் நிவாரணங்களை உடனடியாக வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். முத்துராஜா

https://youtu.be/UfPHbGx5pF0

கல்வியில் சிறந்து வாழ்வில் உயரிய இடத்தை அடைய வேண்டும். அத்தகைய இடத்தை அடைய மாணவர்களுக்கு கல்வி மட்டுமே உறுதுணையாக இருக்கும். மாணவ, மாணவிகள் கல்வியிலும் பிறத்துறைகளிலும் மேன்மை அடைந்திட தேவையான அனைத்து நடவடிக்கை, உட்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தும் மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு

https://youtu.be/RTmR8V0TZY4

You missed