Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளின் ஐந்து பேரில் செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் திருட்டு. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மருத்துவமனையில் உள்ள பயனாளிகள் பொருட்கள் திருடப்பட்டு வரும் சம்பவங்களால் நோயாளிகள் அவதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் அறிஞர் அண்ணா அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனை ஒன்று கடந்து சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட உள்நோயாளிகள் பகுதிகளில் எங்குமே சிசிடிவி கேமராக்கள் இல்லை என்ற புகார் இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் காவலாளிகள் யாரும் இல்லாத நிலை இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

https://youtu.be/kQF2Qjw0tog

அதிமுக பிரமுகரை திமுக பிரமுகர் அருவாளால் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் திமுக பிரமுகர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை அதிமுக பிரமுகரை கொலை செய்ய நடந்த சம்பவத்தில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

https://youtu.be/4KpUH56XYkw

புதுக்கோட்டையில் அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் Ex அமைச்சர் Dr.விஜயபாஸ்கர் MLA – வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

https://youtu.be/hn6kc3lXWTw

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகளை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்.

https://youtu.be/cZIFk37C7_4

செஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்-அடிக்கடி விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.

https://youtu.be/aLimFFPiWXo

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மரமடக்கி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்.

https://youtu.be/Cd8E1xJufpo

You missed