Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தஞ்சையில் உள்ள சிவாஜி கணேசன் முழு உருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் சிவாஜி பேரவை தலைவர் சதா வெங்கட்ராமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .

https://youtu.be/U49a8s0ah94

சிவகங்கை அருகே உள்ள நாட்டார்குடி கிராமத்தில் இன்று நடந்த கொடூரமான தாக்குதல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விவசாயியாக இருந்த 63 வயது சோனைமுத்து என்ற முதியவர் மர்மநபர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு, தலையை துண்டித்து நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றிய நிலையில், தலை காணாமல் போயுள்ளதால், அதனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

https://youtu.be/gkdw2gaNKcY

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சின்மயானந்த விநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

https://youtu.be/x0usWDub8KA

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/djwyQjf1VFY

மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது- எம்ஜிஆர் காலம் தொட்டு அரசியல் களத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக மதுரை திகழ்ந்து வருகிறது – மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் – 1980களில் மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு அடுத்த படத்தை இயக்க உள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஜென்ம நட்சத்திர திரைப்படத்தின் இயக்குனர் பேட்டி

https://youtu.be/dNC-EiFRivc

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை குரங்கு கடித்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.

https://youtu.be/UaQJSGAvL14

You missed