Category: விழுப்புரம்

விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் பயின்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்து கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது இடஒதுக்கீடு தொடர்பாக தவறுதலான பதிவினால் கல்லூரியில் பயிலமுடியவில்லை என கூறி பாதிக்கபட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்கோரிக்கை மனு அளித்திருந்தார். மாணவியின் மனுவின் மீது மின்னல் வேகத்தில் ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

https://youtu.be/YzqC_rmqteU

முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் E.S.உமா IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P.சரவணன் IPS.,* அவர்களின் தலைமையில் தமிழ்நாடு காவலர் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/unmBf3aGXqU

செஞ்சி தீயணைப்பு துறை சார்பில் பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

https://youtu.be/0AgJ_oMUcbQ

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று உரிமை மீட்க தலைமுறை காக்க தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டார்.

https://youtu.be/0EVrfm3tDOk

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராம குடிபோதையில் வந்த மருதாச்சலம் தந்தை சடையாண்டியை ரீப்பர் பட்டையால் கடுமையாக அடித்துள்ளார்‌. இதில் சம்பவ இடத்திலேயே சடையாண்டி உயிரிந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி காவல்துறையினர் சடையாண்டி உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://youtu.be/xB7yMKI5YNw

You missed